தூத்துக்குடி அருகே கீழ வல்லநாடு கிராமத்தில் மகள் காதலனுடன் சென்றதால் தம்பதியர் தற்கொலை
தூத்துக்குடி அருகே கீழ வல்லநாடு கிராமத்தில் மகள் காதலனுடன் சென்றதால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம்,வல்லநாடு அருகே உள்ள கீழ வல்லநாடு,கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (45), இவரது மனைவி சங்கரம்மாள் (40),இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிகாம் முடித்துள்ளார். இந்த நிலையில்,நேற்று அவரது மகள், தான் காதலித்து வந்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் சென்று விட்டாராம். இதில் மன வேதனையடைந்த சங்கரம்மாள் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலையில் மனைவி தூக்கில் தாெங்கியதை பார்த்த கணவர் அதிர்ச்சியில் விஷம் குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி ஊரகம் டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.