நடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வு
சென்னை 2021 ஜனவரி 2 ;தமிழ் திரையுலகில் நடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 2020 ஆம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அஜித்குமார், தனுஷ், ஜோதிகா ஆகியோர் தென்னிந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பன்முகத்தன்மை வாயந்த நடிகர் – அஜித்குமார்
சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை – ஜோதிகா (ராட்சசி)
சிறந்த இயக்குனர் – ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த படம் – டூ லெட்
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பன்முக ஆற்றல் கொண்டவராக அஜித்குமாருக்கு சிறப்பு விருதும், ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த படமாக இயக்குனர் செழியன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.