வழக்கறிஞர் இ.அதிசயகுமார் - கிரேஸ் @ முத்துலெட்சுமி அவர்களின் புதல்வி வழக்கறிஞர் அ.ஏஞ்சலின் ஃப்ரீடா - வுக்கு வாழ்த்து தெரிவித்த வழக்கறிஞர்கள்
தூத்துக்குடி 2023 செப் 11 ; தூத்துக்குடி EAK சட்ட அலுவலகத்தின் அடுத்த தலைமுறை வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் இ.அதிசயகுமார் - கிரேஸ் @ முத்துலெட்சுமி அவர்களின் புதல்வி வழக்கறிஞர் அ.ஏஞ்சலின் ஃப்ரீடா இன்று 11.9.23 தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்து தனது பெற்றோரிடம் ஆசி பெற்றார். பின்னர் EAK அலுவலக சக வழக்கறிஞர்கள் பொன்னாடை போர்த்தியும், சட்ட புத்தகம் வழங்கியும்,மாலை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்த போது எளிய மக்களின் நீதிக்கான சட்ட பணியும், சமூக பணியும் சிறக்கட்டும் என்று பலர் வாழ்த்தினர்.