கடலில் பேணா சிலை மற்றும் கடலில் காற்றாலை வைக்கும் திட்டங்களை எதிர்த்து,கடலும் கடற்கரையும் கடலோடிக்கே என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான D. ஜெயக்குமார்.
சென்னை இராயபுரம் புனித சேவியர் தெருவில் கடலில் பேணா சிலை மற்றும் கடலில் காற்றாலை வைக்கும் திட்டங்களை எதிர்த்து தமிழகம் தழுவிய ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று மாண்புமிகு கவர்னரிடம் பதிவு செய்யும் வகையில் கடலும் கடற்கரையும் கடலோடிக்கே என்று முதல் கையெழுத்திட்டு முன்னாள் அமைச்சரும் சபாநாயகரும் D. ஜெயக்குமார், தலைமையில் கையெழுத்து இயக்கத்தை கடல்சார் மக்கள் நல சங்கமம் மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடங்கப்பட்டது.
இதில் 28 மீனவ அமைப்புகளுடன் அணைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் மு.ராஜேஸ்வரி பிரியா, மீனவ மக்கள் முன்னணி பொது செயலாளர் வே சங்கர்,மீனவர் கூட்டுறவு சங்கம் தலைவர்கள் மற்றும் உயர்திரு. கடலார், பிரவீன் குமார் பரதவர், சேனாதிபதி சின்னதம்பி,தங்கம், பாலு, ஜெயராமன், ரொனால்ட், ஜெபராஜ் என 300க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.