நிர்வாணமாக இரண்டு மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி ;வீட்டில் அதிசயங்கள் நடக்கும் என்று மந்திரவாதி கூறியதால்...பரபரப்பு
மதனப்பள்ளி 2021 ஜனவரி 27 ;ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி சிவ நகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக உள்ளார் இவரது மனைவி பத்மஜா தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக உள்ளார் இவரது மகள்கள் மகள்கள் (27) சாயி திவ்யா (22) இதில் மேனேஜ்மென்ட் இந்தியன் பாரஸ்ட் சேர்விஸ் படித்துவந்தார் சாயி திவ்யா பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு சொந்தமான இசைக் கல்லூரியில் படித்து வந்தார் இந்த நிலையில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட புருஷோத்தம் பத்மஜா தம்பதிகளுக்கு யாரோ ஒரு மந்திரவாதி கூறியதாக கூறப்படுகிறது அவரது ஆலோசனைப்படி செய்தால் வீட்டில் அதிசயங்கள் நடக்கும் என தெரிவித்தாராம், இதை நம்பி பேராசிரியர் தம்பதி நள்ளிரவில் பூஜைகள் செய்து வந்தனர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நீண்டநேரமாக பூஜை நடத்தியுள்ளனர் அப்போது தங்கள் மகளையும் பூஜைக்கு அழைத்துள்ளனர் நடக்க போகும் விபரீதம் தெரியாமல் இரு மகள்களும் பூஜை அறைக்கு சென்றனர் அங்கு மகள்களை நிர்வாணமாக அமரும்படி பெற்றோர் கூறினர். முதலில் இரு மகள்களும் மறுத்துள்ளனர். ஆனால் அவர்களது பெற்றோர் நம் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க வேண்டும் என்றால் நாங்கள் சொன்னதை நீங்கள் செய்தாக வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் மகள்கள் இருவரும் நிர்வாணமாக அமர்ந்து உள்ளனர். அப்போது கண்களை மூடி வேண்டிக்கொள்ளும் படி பெற்றோர் தெரிவித்தனர். இதை நம்பி மகள்கள் இருவரும் கை கூப்பியபடி கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்தனர். அப்போது பெற்றோர் இருவரும் தயார் நிலையில் வைத்திருந்த உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் தம்புல்ஸ் எடுத்து சாயி,திவ்யா இருவரின் பின் மண்டையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் நிலைகுலைந்த இரு மகள்களும் அலறி கூச்சலிட்டனர், சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை தட்டினர் ஆனால் திறக்காததால் உடனடியாக மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது பூஜையறையில் நிர்வாண நிலையில் இருந்த இரண்டு மாணவிகளின் சடலங்கள் கிடந்தன.
சடலங்களை மீட்டு போலீசார் பேராசிரியர் தம்பதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இது குறித்து டிஎஸ்பி மனோகரி கூறுகையில் இரு மகள்களையும் நரபலி கொடுக்க இவர்களுக்கு அறிவுரை கூறிய சாமியார் யார்? யார்? என விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர். பெற்ற மகள்களை பேராசிரியர் தம்பதி நரபலி கொடுத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது ஒருநாள் அவர்கள் உயிருடன் வருவார்கள் என்று பேராசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். போலீசார் கூறியும் திறக்க மறுத்து ஜன்னல் வழியாக போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம், எங்களது இரு மகள்களையும் நரபலி கொடுத்து உள்ளோம், ஒருநாள் பொறுத்திருங்கள், இரண்டு மகள்களும் மீண்டும் உயிர்ப்பித்து விடுவார்கள் என தெரிவித்தனர். இதைக்கேட்டு போலீசார் மற்றும் அங்கு திரண்டிருந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக கதவை திறக்க வேண்டும் என போலீசார் விசாரித்த பிறகு அவர்கள் கதவைத் திறந்து உள்ளனர்