இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது - ரூபாய் 50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது - ரூபாய் 50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்க்கப்பட்டது.
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கே.வி.கே சாமி நகரை சேர்ந்த சுடலைமுத்து மகன் நடராஜன் (28) என்பவர் கடந்த 21.01.2023 அன்று தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி டீ.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மகன் மாரியப்பன் (21) என்பவர் மேற்படி நடராஜனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி வழக்குபதிவு செய்து எதிரி மாரியப்பனை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 50,000/- மதிப்பிலான இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
கைது செய்யப்பட்ட எதிரி மாரியப்பன் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் திருட்டு, கஞ்சா உட்பட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.