தூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொலை ; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரடி விசாரணை
தூத்துக்குடி 2021 பிப்ரவரி 25 ;தூத்துக்குடி அருகே மது போதையால் திருமணத்தன்று மாலையில் மணமகளின் தந்தை குத்தி கொலை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், புறநகர் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள புளியமரத்து அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூரன் இவரது மகன் சண்முகராஜ் (43). இவரது மகளுக்கு அதே கிராமத்தில் இன்று காலையில் திருமணம் நடந்துள்ளது.
இன்று மாலையில் சண்முகராஜ் அவரது நண்பரான அதே கிராமத்தைச் சேர்ந்த சேசைய்யா இவரது மகன் இமானுவேல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டு இருக்கும் போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த இமானுவேல் பீர்பாட்டிலை உடைத்து சண்முகராஜாவை குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து, இமானுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.