Onetamil News Logo

கொரோனா சர்க்கரை நோய் என்பதே பொய், மருத்துவத்துறையின் வணிக நோக்கில் அதைப் பெரிது படுத்துகின்றார்கள் என்கிற பரப்புரையை நம்பாதீர்கள்,மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம் பாலசுப்ரமணியன் விஸ்வநாதன் தகவல்   

Onetamil News
 

கொரோனா சர்க்கரை நோய் என்பதே பொய், மருத்துவத்துறையின் வணிக நோக்கில் அதைப் பெரிது படுத்துகின்றார்கள் என்கிற பரப்புரையை நம்பாதீர்கள்,மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம் பாலசுப்ரமணியன் விஸ்வநாதன் தகவல்   


  கொரோனா சர்க்கரை நோய் என்பதே பொய், மருத்துவத்துறையின் வணிக நோக்கில் அதைப் பெரிது படுத்துகின்றார்கள் என்கிற பரப்புரையை நம்பாதீர்கள்.என்று மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.                                                                                                 சர்க்கரை நோய் என்பது உண்மையா பொய்யா? மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம் பாலசுப்ரமணியன் விஸ்வநாதன் குறிப்பு ;
இந்தக் கேள்வி வருவதற்கான காரணமே ஒரு மருத்துவர் என்பதை எண்ணி உளமார வருந்துகிறேன்.சர்க்கரை நோய் மருத்துவம் என்பது வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதாலும் அதன் பொருளாதார விளைவுகள் அதிகம் என்பதாலும் இத்தகைய செய்திகள் உடனே மக்களைச் சென்று அடைகின்றன.சர்க்கரை நோய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்திய மருத்துவ நூல்களில் அது மதுமேகம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.முதன் முதலில் ஒருவர் சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் மொய்த்ததை வைத்து ஒரு வேளை அது இனிப்பாக இருக்குமோ என ஆய்ந்தறிந்து அதை இனிப்புநோய் என்ற பொருளில் மதுமேகம் என்று அழைத்தார்கள். அப்போதே அத்தகைய பாதிப்பு இருப்பவர்களுக்கு வேறென்ன அறிகுறிகள் இருக்கும் என்றும் அறிந்திருந்தனர்.அதற்கான சில மருந்துகளும் பயன்பாட்டில் இருந்தன.நவீன மருத்துவத்தில் ஆய்வுகள் மூலம் இன்சுலின் குறைபாடுதான் சர்க்கரை நோய்க்குக் காரணம் என்று அறிந்து அதைச் சுரக்க வைக்கவும் சரியாகப் பயன்பட வைக்கவும் மருந்துகளைக் கண்டுபிடித்தனர்.ஒரு நேரத்தில் பன்றியின் இன்சுலின் மனிதர்களுக்குப் பயன்படும் என அறியப்பட்டு அதன்மூலம் இலட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.தற்போது மனித செல்கள் மூலம் செயற்கை இன்சுலின் தயாரிக்கப்ட்டு பயன்பாட்டில் உள்ளது.சர்க்கரை நோய் உள்ளது என்பதை எப்படி அறிவது?அதிக பசி,அதிக தாகம்,அதிகம் சிறுநீர் கழித்தல்,உடல் சோர்வு,உடல் இளைப்பு போன்ற அறிகுறிகள் வந்தால் அறிந்து கொள்ளலாம்.இரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.அறிகுறிகள் பெரிதாக வருவதற்கு முன்பே இத்தப்பரிசோதனை மூலம் அறிந்து கொண்டால் முன்னெச்சரிக்கையாக உணவுக்கட்டுப்பாடு,உடற்பயிற்சி போன்றவற்றைக் கடைப்பிடித்தால் பல ஆண்டுகள் மாத்திரைகள் இல்லாமல் இருக்கலாம்.நீண்ட கால கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் இதய நோய்,பக்கவாதம்,சிறுநீரக நோய்,கண் பார்வை பாதிப்பு போன்றவற்றை உண்டாக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.கொரோனா சர்க்கரை நோய் என்பதே பொய், மருத்துவத்துறையின் வணிக நோக்கில் அதைப் பெரிது படுத்துகின்றார்கள் என்கிற பரப்புரையை நம்பாதீர்கள்.சர்க்கரை இருக்கிறது என்று ஒரு மருத்துவர் சொன்னால் மறுகருத்தைப் பெற்றுக் கொள்ளவும்.சர்க்கரை நோய் பற்றிய தவறான பரப்புரைகளால் ஏமாற வேண்டாம்.
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?
சுகர்னு doctor கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார்.
ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு *2 mg tablet* கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு *combination tablet* கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு *இன்சுலின்* போட சொல்றார்.
அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை* போட சொல்றார்.
அப்புறம் *கொலஸ்ட்ரால்* சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
அப்புறம் *கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க* சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் *ஒரு வருஷத்துல உயிர்* போய்டுது.
*இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTOR ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.*
1.
*தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல*.
2.
*மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல*.
3.
*ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை*.
4.
*வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்*.
*TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை*. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகற வரைக்கும்
* இயற்கை மருத்துவம், சித்தா, இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான,
முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
*சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்*..
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗
1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.25 வயதினருக்கு சர்க்கரை நோய் வந்தால் அதை பராமரிப்பது எப்படி?
25 வயதினருக்கு சர்க்கரை நோய். வந்தால் அதை Mody-Maturity onset diabetes (in the) young என்பர்.கொஞ்சம் வருத்தமான நிகழ்வுதான்.ஆனால் 35 ல் எல்லாம் பலருக்கு வரும்போது ஒரு பத்து ஆண்டு முன்பு. அவ்வளவுதான்.பெரும்பாலும் இவ்வாறு இள வயதில் வரும்போது உடறபருமனும் இருக்க வாய்ப்புள்ளது. அப்படியிருந்தால் அதையும் கட்டுப்படுத்த வேண்டும்.முதலில் முழு உடற்பரிசோதனை செய்து வேறு ஏதாவது ஹார்மோன் கோளாறு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.செய்யும் வேலைக்குத் தகுந்தவாறு உணவு உட்கொள்ள வேண்டும்.வெறும் அலுவலக வேலை செய்பவர் வெறும் 1600–1800 கலோரிகள் உணவு உண்டால் போதும்.உடல் உழைப்பு அதிகமுள்ளவர் அதிகமாக கலோரிகள் எடுத்துக் கொள்ளலாம்.அரிசி,கோதுமை, கேழ்வரகு எதுவானாலும் அளவோடு சாப்பிட வேண்டும்.அசைவம் சாப்பிடுபவர்கள் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.நேரடி இனிப்புப் பொருட்களைக் குறைக்க வேண்டும்.உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை ஒதுக்க வேண்டும்.பழங்கள் சாப்பிடலாம்.பழச்சாறு வேண்டாம்.உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.புகை,மதுப்பழக்கம் அறவே கூடாது.ஒரு நல்ல மருத்துவரை அணுகி அவர் சொல்வதை நம்பிக்கையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.மரபு சார் மருத்துவத்துறை வளர்ந்து வருகிறது.இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் முதல் வகை சர்க்கரை நோய் வராமல் தடுக்க மருத்துவம் வர வாய்ப்புள்ளது.இரண்டாம் வகை சர்க்கரை நோய் மரபு,குடும்ப வாகு,உணவு உட்கொள்தல், உடற்பயிற்சியின்மை,சிலவகை மருந்துகளால் தூண்டப்பட்டு வருவது போன்ற பல காரணங்களால் வருவதால் அதை வராமல் தடுக்கவோ முற்றிலுமாக ஒழிக்கவோ இயலாது.சர்க்கரை நோய் உள்ளவர், வெந்தயத்தை 24 மணிநேரம் ஊற வைத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமா?
ஆம் குறையும்
வெந்தையம் ஊறவைக்கும் முறை;
பத்து கரண்டி வெந்தையத்தை எடுத்து அதனை தண்ணீரில் கழுவி பின் சுத்தமான குடிக்கும் தண்ணீரில் ஒரு எட்டு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்,எட்டு மணிநேரம் முடிந்ததும் தண்ணீரை வடிக்கட்டிவிட வேண்டும் (வடிகட்டிய தண்ணீரை குடிக்கலாம்)பின் அதனை ஒரு சுத்தமான துனியில் வைத்து எட்டு மணிநேரம் மூடிவைக்க வேண்டும்
எட்டு மணிநேரம் பிறகு திறந்து பார்த்தால் அது முளைகட்டிவிடும்,பிறகு அதனை காலையில் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் அளவும் அதை போல் மத்தியம் உணவக்கு முன்பும் இரவு சாப்பிட்டு உறங்குவதற்க்கு முன்பும் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்
ஒரு மாதத்தில் கட்டாயம் மாற்றம் தெரியும்
குறிப்பு;
இப்படி ஊறவைத்து முளை கட்டி சாப்பிடும் வெந்தையத்தில் கசப்பு தன்மை அதிகம் இருப்பதில்லை
அனைவரும் சாப்பிடலாம் உடலுக்கும் ஆரோக்கியம் சக்கரை நோயும் கட்டுப்பாடில் இருக்கும் 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo