அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வழிமொழிந்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வழிமொழிந்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்.
மார்ச் 19
அதிமுகவின் அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்றும் இன்றும் வேட்புமனு பெறப்படுகிறது. இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வைத்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவை வழிமொழிந்து கையெழுத்திட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது உதவியாளர்கள் பாலஜெயம், சாம்ராஜ், ஆனந்த் உடனிருந்தனர்.