தூத்துக்குடி 39வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் தேரடி திடலில் நின்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் மாநகராட்;சி 39வது வார்டுக்குட்பட்ட சிவன்கோவில் தேரடி திடல் ,1ம் கேட் சமீபம் உட்பட வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதிய சாலை அமைக்க வேண்டும். சில பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்து கொடுத்து கழிநீர் செல்வதற்கு கால்வாய் வசதிகள் முறையாக செய்து கொடுக்க வேண்டும். புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் போது பழைய சாலையை தூர்வாரி உயரம் ஆகாதவாறு பழைய சாலை அளவுபடியே அமைக்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தனர். முழுமையாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலரும் பகுதி செயலாளருமான சுரேஷ்குமார்,39வது வட்ட திமுக செயலாளர் கீதா கே .செல்வ மாரியப்பன் மகளிர் அணி துணைச் செயலாளர் லிசினா சீலன், இசையமைப்பாளர் சீலன் சுருதி, 39 ஆவது வார்டு திமுக இளைஞரணி ஸ்டெப்பின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.