விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தகவல்
தூத்துக்குடி 2021 ஜனவரி 25 ;தூத்துக்குடி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் அனுமதியின்றி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களை ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக 144 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் போராட்டங்களை ஏற்பாடு செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் போராட்டங்களில் அனுமதியின்றி பயன்படுத்தும் டிராக்டர் வாகனங்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 177 r/w 179 மற்றும் 207 ஆகிய பிரிவுகளின் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.