மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள், விழாவானது மாவட்டத்திலுள்ள ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தினருக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்
தூத்துக்குடி 2023 மார்ச் 16 ;மாநில திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பிறந்தநாள் விழாவானது மாவட்டத்திலுள்ள ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தினருக்கு உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி ஜோயல் பிறந்தநாள் விழா இன்று அவரது ஆதரவாளர்களால் மாவட்டத்தில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் இல்லத்தினருக்கு சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பொன்சேகர் தலைமையில் காலை மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட திமுக பிரதிநிதி பேய்க்குளம் ஜெயக்குமார், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணன் மற்றும் டியோடின் ஐசக், செல்வம், மாரிமுத்து, சுதன், முடிவைத்தானேந்தல் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோன்று, தூத்துக்குடி பி.என்.டி.காலனியிலுள்ள பிளஸ்சிங் முதியோர் இல்லத்தினருக்கு அறுசுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏ.பி.ஆர்.ஜோ, டினோ, தினேஷ், வள்ளிக்கண்ணன், அபிருத், பிரகாஷ், துரைபாண்டி, தாவீது, அருண், நந்து, ஹரி, அபிமன்யூ, சுசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், தூத்துக்குடி லூசியா ஆதரவற்றோர் இல்லத்தினருக்கு அறுசுவையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், வழக்கறிஞர் பால்துரை, சேக்முகமது, ஜோ, மட்டக்கடை சகிலன், ஆனந்த், பாரதி, கரண், சுபாஷ், தளபதிமுருகன், நடராஜன் புதுக்கோட்டை சிவா உட்பட பலர் கலந்துகொண்டனர்.