Onetamil News Logo

பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே பரிதாபமாக இளம்பெண் இறந்தார். 

Onetamil News
 

பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே பரிதாபமாக இளம்பெண் இறந்தார். 


சென்னை 2022 ஜூலை 27 ;சென்னை அடுத்த மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சினேகா (வயது 21). இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் யுவராஜ் தனது மனைவி சினேகா மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகே வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சினேகா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் யுவராஜூம், அவரது 11 மாத கைக்குழந்தையும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த விபத்து குறித்து அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான வேலூரை சேர்ந்த ராஜேஷ் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo