வ.உ.சி. துறைமுக அனைத்து தொழிற்சங்கத்தினர் இன்று திடீரென துறைமுக வாயிலில் மறியல் போராட்டம் ;300க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அணிவகுப்பு
தூத்துக்குடி 2018 செப் 28 ;தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வாயிலில் துறைமுக ஊழியர்கள், சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த பணியில் இருந்து துறைமுக ஊழியர்களை அகற்றுவதற்கு துறைமுக நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் வ.உ.சி. துறைமுக அனைத்து தொழிற்சங்கத்தினர் இன்று திடீரென துறைமுக வாயிலில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்பொழுது போராட்டத்துக்கு துறைமுக திடீர் போராட்டத்தால், வ.உ.சி. துறைமுகத்துக்குள் லாரிகள் செல்ல முடியவில்லை. வ.உ.சி. துறைமுகத்தின் உள்ளேயும், வெளியேயும் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. சுமார் 3மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.