3 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை ; சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையிலான போலீசாரை நியமித்து காவலர் ஆனந்த குமாரை கைது செய்ய எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவு
தூத்துக்குடி 2020 நவம்பர் 28 ;தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த காவலர் கைது செய்யப்பட்டள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 20.10.2017 அன்று புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மகன் கணேசன் (48/17) என்பவர் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் மாரிமுத்து (26), மாரிமுத்துவின் தந்தையும் சண்முகம் மகன் லெட்சுமணன் (60); ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இக்கொலைக்கு உடந்தையாக இருந்த மற்றொரு எதிரியான தருவைக்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்தகுமார் (31), இவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் மருத்துவ விடுப்பில் சென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ,தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பழனிகுமார் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையிலான போலீசாரை நியமித்து காவலர் ஆனந்த குமாரை கைது செய்ய உத்தரவிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் மேற்படி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் இன்று ஆனந்தகுமாரை கைது செய்தனர்.