திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளுக்குள் மூன்று லட்சம் கோடி கடன் வைத்துள்ளது தமிழக அரசு. மகளிர் உரிமை தொகை ரூபாய் 1000 பெண்கள் அனைவருக்கும் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தூத்துக்குடியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு
தூத்துக்குடி 2023 செப் 17 ; மறைந்த தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும், மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கி பேசும் பொதுக்கூட்டம் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, தூத்துக்குடி விவிடி சிக்னல் எம்ஜிஆர் பூங்கா எதிரே நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக பகுதி செயலாளரும் முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான சேவியர் தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செண்பகச் செல்வன், சுடலைமணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே. மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா.சுதாகர் வரவேற்று பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பேசும்போது, தமிழகத்தில் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பேற்ற காலகட்டத்தில் தமிழகத்தில் மொத்தமே 6 லட்சம் கோடி கடன் மட்டுமே இருந்தது. ஆனால் திமுக அரசு தற்போது ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே மூன்று லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆட்சிக்கு வரும்போது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று ஆட்சிக்கு வந்த திமுக அரசு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு திட்டத்தை துவங்கி உள்ளது. ஆனால் அனைத்து குடும்பத் தலைவிக்கும் தருவதற்கு மாறாக கடுமையான விதிகளை விதித்து ஒரு கோடிக்கும் குறைவான பெண்களுக்கே மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக தெரிகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல் மகளிர் உரிமை தொகையை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் திமுக ஆட்சிக் காலத்திலேயே பறிபோனது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ஒழிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் ஸ்டாலினால் நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை. தமிழகத்தின் உரிமைகள் காக்கப்பட மீண்டும் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, தலைமைக் கழக பேச்சாளர்கள் குமுதா பெருமாள், நடராஜன் என்ற குறிச்சி சேகர், மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா. ஹென்றி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்டத் துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், தனராஜ், பிரபாகர், சுதர்சன் ராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லெட்சுமணன், முருகன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸி, மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் கல்விகுமார், வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், சிவசங்கர், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், ஐடியல் பரமசிவம், கேடிசி ஆறுமுகம், லெட்சுமணன், எம்பெருமாள், பிராங்கிளின் ஜோஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன் தேவராஜ், பிஜேசி சுரேஷ், முத்துகிருஷ்ணன், ஏகே மைதீன், வெங்கடேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, தமிழரசி, பொன்ராஜ், ஆத்திகண், அண்ணா தொழிற்சங்கம் ஜவகர், ரயில்வே மாரியப்பன், ஆழ்வாரப்பன், மாவட்ட பிரதிநிதி கேகேபி விஜயன், ஹார்பர் பாண்டி, பிரபாகரன், வர்த்தக அணி தலைவர் திருத்துவ சிங், பொருளாளர் சுகுமார், ஆனந்தராஜ், வட்டச் செயலாளர்கள் சந்திரசேகர், பாக்யராஜ், சொக்கலிங்கம், கொம்பையா, எஸ்.கே. முருகன், மகாராஜா, நியுக்கலாஸ், ரகுநாதன், உதயசூரியன், மனோகர், நவ்சாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, யோவான், மற்றும் சுந்தரேஸ்வரன், பரிபூரண ராஜா, உதயகுமார், நிலாசந்திரன், சங்கரநாராயணன், இசக்கி முத்து, சண்முகவேல், தாசன், பொன்சிங், முருகேசன், சேவியர் ராஜ், குருஸ்புரம் அண்டோ, பிரேம்குமார், தங்கமதன், தருவைகுளம் ராஜா, வேல்சாமி, சுப்புநாராயணன், ராஜா, ராமசாமி, பண்டாரவிளை பால்துரை, சுரேஷ், சேர்மராஜா, பாலாஜெயம், சாம்ராஜ், சரவணவேல், சகாயராஜா, ஆனந்த், யுவன் பாலா, மைதின், மகளிர்கள் இந்திரா, ராஜேஸ்வரி, பானுமதி, பத்மாவதி, முத்துலட்சுமி உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டம் முடிவில் மேற்கு பகுதி ஐடி விங் செயலாளரும் வட்டக் கழக செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன் நன்றி கூறினார்.