தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா, தலைமையில் பேரிடர் தணிப்பு தொடர்பான தன்னார்வலர்கள் தேர்வு செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க கூட்டம்
தூத்துக்குடி 2021 ஜனவரி 21 ;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா, தலைமையில் பேரிடர் தணிப்பு தொடர்பான தன்னார்வலர்கள் தேர்வு செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா, தலைமையில் பேரிடர் தணிப்பு தொடர்பான தன்னார்வலர்கள் தேர்வு செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பான விளக்க கூட்டம்; இன்று (23.01.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஆப்த மித்ரா திட்டம் பற்றிய கையேட்டினை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா, வெளியிட்டார். அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், பெற்றுக்கொண்டார்.
பின்னர் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணை செயலாளர் ரமேஷ் குமார் கண்டா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆப்த மித்ரா என்ற மத்திய அரசு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பேரிடரின்போது மக்களை பாதுகாப்பதற்காக தன்னார்வலர்களை; உருவாக்கும் பணியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதுதொடர்பாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடலோர காவல் படையினர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புயல், தொடர் மழை வெள்ளம் ஆகியவற்றின்போது பொதுமக்களை பாதுகாப்பதற்காக தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தீவிரமாக கள பணியாற்றி மக்களை காப்பாற்றும் வகையில் இவர்கள் செயல்படுவார்கள். ஆப்த மித்ரா என்ற திட்டம் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் 13 உட்பட 16 மாவட்டங்களில் இத்திட்டம் கொண்டு வரப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டத்தின் மூலம் 300 முதல் 500 பேர் என தமிழகத்தில் 5000 தன்னார்வலர்களை இத்திட்டத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்படுவார்கள். நன்கு பயிற்சி பெற்ற பிறகு பயிற்சி பெற்ற நபர்களை சென்னை மற்றும் பிற மாநிலங்களில் அனுப்பி அவர்களுக்கு அந்த மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படும். இந்த திட்டமானது அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. எனவே தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் இணைந்து மழை வெள்ள காலத்தில் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா(திருச்செந்தூர்), பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வபிரசாத், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் மற்றும் கடலோர காவல் படையினர், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.