நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத மாற்றத்தை தேடி" என்னும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாரும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்னும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி தென்பாகம், ஆழ்வார்திருநகரி மற்றும் எட்டையாபுரம் ஆகிய காவல் நிலைய போலீசார் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், பெண்கள் மற்றும்; குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக காவல்துறையினரின் முன்னிலையில் கீழ் கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது. "நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்” என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.